







உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)
(அடைப்புகளிலுள்ள குறியெண்கள் கீதையில் அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் குறிக்கின்றன).
(அடைப்புகளிலுள்ள குறியெண்கள் கீதையில் அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் குறிக்கின்றன).
எமது திசைவழியையும்
தந்திரோபாயங்களை உறுதி
செய்வதற்கு எதிரியின்
மூலோபங்களை முதலில் சரியாக
அடையாளம் கண்டிருக்க
வேண்டும். தந்திரோபாயங்கள்
குறித்து எப்போதும் விழிப்பாக
இருக்க வேண்டும். ஒரு சிவில்
யுத்தத்தின் போது, எதிரி
பொதுவாக தனித்தனியாக
குழுக்களை பிரித்தழிக்க முனையும்
அதே வேளை தனிநபர்களாகவும்
கையாளும். எதிரியின் இந்த
முயற்சிக்கு வாய்ப்பான சூழல்
குறித்து நாம் எப்பொழுதும்
ஆராய்ந்தவண்ணமிருப்பது
அவசியமாகும். மக்கள் பலம்,
விநியோகம், போக்குவரத்து,
தொடர்புமுறை, போர்க்கருவிகள்,
வழிநடத்தக்கூடிய தலைமை
போன்ற அனைத்துமே இந்த
வாய்ப்பான சூழலுக்குள்
அடக்கலாம். எமது இறுதி
இலக்கை நோக்கிய
பயணத்திற்கென எமது
ஆராய்வுக்கு கிட்டிய எமக்கேயுரிய
போர்த்தந்திரோபாயங்களை
நாங்கள் வகுத்துக்கொள்ள
வேண்டும்.
(கெரில்லா போர் முறை பற்றிய
நூலில் சே குவேரா)
0 கருத்துகள்